சீனப் பெண்ணின் செந்தமிழ்

By ப்ரதிமா

தமிழ் பேசும் சீனர்களில் இலக்கியாவும் ஒருவர். ‘தமிழை நேசிக்கிற சீனப் பெண்’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைத் தன் இந்தியப் பயணங்களின்வழி உணர்த்துகிறார். ஐந்து நாள் பயணமாக சென்னை வந்தவர், தமிழ் நண்பர்களைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த இவரது சீனப் பெயர் சுன் ட்ச்சிங். பெய்ஜிங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தில் 2007இல் இளநிலைப் படிப்பில் சேர்ந்தார். அப்போது தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தார். “இந்தியக் கலாச்சாரத்தின் மீது எப்போதும் எனக்கு ஆர்வம் இருந்தது. குறிப்பாகத் தமிழையும் தமிழர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல். அதனால், தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்” என்கிறார் இலக்கியா. பல்கலைக்கழகத்தில் தமிழர்களும் தமிழ் பேசும் சீனர்களும் பேராசிரியராக வழிநடத்த, படிப்புக்கான நான்கு ஆண்டு காலத்தில் தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார் இலக்கியா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE