மதுரையின் பாரம்பரிய அடை யாளங்களுள் ஒன்று சுங்குடிச் சேலை. கைகளால் முடிச்சு போட்டு ஒரு டிசைனை உருவாக்கி, அதற்குச் சாயம் போட்டு இந்தச் சேலைகள் வண்ணமையமாக உருவாக்கப்படுகின்றன. 100 சதவீதம் கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாக்கப்படும் இந்தச் சேலைகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை சுங்குடி உற்பத்தி யாளர் சங்கச் செயலாளர் ஏ.கே.ரமேஷிடம் பேசுகையில், “நாங்கள் கடந்த ஆறு தலை முறைகளாகச் சுங்குடிச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறோம். நெசவில் சிறந்து விளங்கிய எங்களுடைய மூதாதையர்கள் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் இங்கே அழைத்துவரப்பட்டனர். எங்களது நெசவின் நேர்த்தியைப் பார்த்த மதுரை மக்கள் எங்களை ‘பட்னுல்காரர்கள்’ (பட்டு நெசவாளர்கள்) என அழைத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்