“குற்றவாளிகளில் பலரும் திட்டமிட்டுக் குற்றமிழைப்பதில்லை. அந்த நேரத்து மனக் கொந்தளிப்பாலும் பதற்றத்தாலும் குற்றம் செய்துவிட்டுப் பிறகு வருந்துகிறவர்கள்தாம் அதிகம். சிறையில் அவர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்கப் பயிற்சிகளோடு, பொதுமக்களைச் சந்திக்கிற சூழல் அமைவது அவர்களிடம் மனரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார் சென்னைப் புழல் பெண்கள் சிறையின் காவல் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன்.
சென்னைப் புழல் சிறைக்கு அருகில் அரசு சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பெண் குற்றவாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எத்தனையோ மகளிர் சிறப்புத் திட்டங்களையும் பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களையும் பார்த்த நமக்குப் பெண் கைதிகளால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் பங்க் நம்பிக்கை அளிக்கிறது. பெண் கைதிகளால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் என்கிற வகையில் இது வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்