பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 12: ஆணுக்கு  அன்பு தேவையில்லையா?

By லதா

திருமணம் அவசியமா இல்லையா, அப்படித் தனக்குத் திருமணம் என்கிற ஒரு பந்தம் தேவையெனில் தன் எண்ணங்களுக்கு, செயலுக்கு, குணங்களுக்கு, கனவுகளுக்கு ஏற்ற ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியோ சுதந்திரமோ நம் சமூகத்தில் இருக்கிறதா? ஆனால், ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் ஒருவருக்குத் திருமணமும் அதற்குப் பிறகான பிள்ளைப்பேறும் காலாகாலத்தில் நடந்துவிட வேண்டும் என்று மட்டும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவரை நம் சகபயணியாக ஏற்றுக்கொள்வதால் எவ்வளவு புரிதலும் பொறுப்பும் கூடுகிறது, அதற்கு அந்த இருவரும் உடலாலும் மனதாலும் தயாராகிவிட்டார்களா என்று எந்தவொரு ஆராய்தலும் நம்மிடம் கிடையாது. சாதி, படிப்பு, பதவி, அந்தஸ்து, சொத்து, வருமானம் இவைதான் பெரும்பாலான திருமணங்களை நிர்ணயிக்கின்றன. பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்கள்தாம் இப்படியென்றால் காதலித்து மணந்துகொள்கிறவர்களாவது புரிதலுடன் வாழ்கிறார்களா என்றால், பலரும் திருமணம் முடிந்ததும் காதலைத் தொலைத்துவிடுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE