உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை ‘உலகத் தாய்ப்பால் வாரம்’ கடைபிடிக்கப் படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கவும், நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கவும் உலகச் சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ‘உலகத் தாய்ப்பால் வாரத்தின்’ கருப்பொருளாக உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துவது: ‘வேலைக்குச் செல்லும் பெண்களும் தாய்ப்பால் அளிப்பதற்கான இடத்தை உருவாக்க வேண்டும்’ என்பதே. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையை மாற்ற, தாய்மார், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதற்கான வசதிகளை பணியிடங்களில் அமைத்துத் தருவதை அனைத்து நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்