பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஜூன் 28 அன்று நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணி வென்றது. 2017-18இல் நடைபெற்ற சீசனை வென்ற தமிழ்நாடு அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் கோப்பையைத் தட்டியது. சவாலான நேரத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தவர் கால்பந்து வீராங்கனை இந்துமதி கதிரேசன்.
கடலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகள் இந்துமதி. விளையாட்டுப் பின்னணி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர், இன்று தேசிய அளவில் கவனிக்கப்படும் முன்னணி கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். தமிழ்நாடு அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி தனது பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்தவர். மகளிர் கால்பந்து விளையாட்டில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர். நட்சத்திர வீராங் கனையான அவர் கடந்து வந்த பாதை சவால்கள் நிறைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்