தினமும் மனதைக் கவனி - 23: பெண்மையின் பூரணம் தாய்மையல்ல

By பிருந்தா ஜெயராமன்

நமது கலாச்சாரத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தாய்மை அடையும்போதுதான் முழுமையடையும் என்பது நம்பிக்கை. கருவுறாத பெண்ணை, ‘அந்த’ ஒரு சொல்லால் முத்திரை குத்திவிடுகிறது சமூகம். அவளோ வேதனையில் தவிக்கிறாள். கருவுறாமல் போவதற்குக் கணவனோ, மனைவியோ காரணமாக இருக்கலாம். ஆனால், சில குடும்பங்களில் அந்தப் பெண்ணைத்தான் கைகாட்டுவார்கள். அவள் மனம் புண்படுமே என்று அவர்கள் யோசிப்பதில்லை.

ஒவ்வொரு மாதமும் ‘இந்த பீரியடை மிஸ் பண்ணிடுவேன்’ என்று எதிர்பார்த்திருக்கையில், டாண் என்று மாதவிடாய் வந்து, அவளது ஆசையை நசுக்கிவிடும்போது அவளது ஏமாற்றத்தைச் சொற்களால் விளக்க முடியுமா? என் கனவு நனவாகாதா என்று தனக்குள் அழுதுகொள்வாள். சிலர், உறவினர் குழந்தைக்குச் செய்யும் சடங்குகளை, கருத்தரிக்காத பெண்ணிடம் ஒரு அம்மிக்குழவியைக் கொடுத்துச் செய்யச்சொல்லி, “அடுத்து உன்னுடைய முறை” என்பார்கள். ‘இவர்களுக்கு நான்தான் குறியா?’ என்று அவள் குமைந்துபோவாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE