பகல், இரவு என்கிற சுழற்சியில் பகல் உடல் உழைப்புக்கானது; இரவு மூளையின் ஓய்வுக் கானது, அதாவது தூக்கத்துக் கானது. தூக்கமே மனிதர்கள் உயிர் வாழத் தேவைப்படும் ஓய்வைக் கொடுக்கிறது. இருள் சூழ்ந்த கும்மிருட்டில் மெலடோனின் (Melatonin) என்ற வேதிப்பொருள் மூளையில் உற்பத்தியாகும். இந்த வேதிப் பொருளே தூக்கத்தைத் தூண்டுகிறது. அதுவே மூளைக்கும் உடலுக்கும் முழு ஓய்வையும் அளிக்கிறது.
தூங்குதல், விழித்தல் ஆகிய இரண்டும் சீராகச் சரியான கால அளவில் இருக்கிறதா என்பது மூளையால் தொடர்ந்து கணிக்கப்படு கிறது. இதன் மூலம் தூக்கத்தின் தேவையை பூர்த்திசெய்வதுடன், மூளை தன்னையும் செப்பனிட்டுக் கொள்கிறது. தூங்கும் நேரத் தில் உடல் உறுப்புகளும் ஓய்வுக்கேற்ற பணியைச் சீரான அளவில் செய்தபடியே ஓய்வெடுத்துக்கொள்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்