மனித இனம் என்னதான் கூட்டமாக நாகரிகம் பேணி வாழ்ந்தாலும் அடிப்படையில் மனிதனிடம் இருப்பது ஒரு விலங்கு மனம்தான். கோபம், அடுத்தவர்களைத் தாக்கும் உந்துதல் போன்றவை இயல்பாக அவ்வப்போது நம்மிடம் வந்து செல்லும். அவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் அமைதியான வாழ்க்கையை வாழ மனிதன் முயன்றுவருகிறான்.
இந்தச் சமூக ஒழுங்கு கடைப் பிடிக்கப்படுவதற்கு மனிதரது மூளை, மனதின் முதிர்ச்சி, வளரும் சமூகச் சூழல், வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்கள் போன்றவை காரணங் களாக அமைகின்றன. இவற்றில் பின்னடைவோ பாதிப்போ ஏற்படும் போது அது சமூகச் சிக்கலாக உருவெடுக்கிறது. குற்றச் செயல்களில் சிறுவர்கள், பதின்வயதினர் ஈடுபடுவதை இந்தக் கோணத்திலும் நாம் அணுக வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்