பச்சை வைரம் 16: நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்த பாலக் கீரை

By டாக்டர் வி.விக்ரம்குமார்

மலர்கள் இதழ்களை விரிப்பதைப் போல, கீரை ஒன்று பூமியிலிருந்து நேரடியாகத் தனது இலைகளை விரித்துப் பசுமையோடு நலத்தைப் பரப்பும்! சுவைமிக்க அக்கீரையின் பெயர் பாலக் கீரை! விவசாய நிலத்தில் பாலக் கீரை, முள்ளங்கிக் கீரையைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ‘இரண்டும் ஒன்றுதானோ…’ எனும் சந்தேகம் துளிர்விட வாய்ப்பு அதிகம். பொது வெளியில் ‘பாலக்’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலக் கீரை பலத்தைக் கொடுக்கும் பயில்வான் வகையறா!

‘விருந்தாளி வரப் போறாங்க… அதனால இன்னைக்கு பாலக்கீரைக் கடையல்…’ எனக் கிராமங் களில் சமீபமாகச் சொல்லும் அளவுக்கு மவுசு மிக்க கீரையாக மாறி இருக்கிறது. தனித்துவமான சுவையாலும், வாசனையாலும் விருந்தாளிக்கு மகிழ்வைக் கொடுக்கும் கீரை ரகம் இது. ‘கீரையே பிடிக்காது’ என்று அடம்பிடிப்ப வர்களுக்கு, பாலக் கீரையோடு பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் ஊற்றிப் பிசைந்து கொடுக்க, அதன் சுவையில் மயங்கி பாலக் கீரைக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறிவிடுவார்கள். குறிப்பாகக் குழந் தைகளுக்குச் சுவைமிக்க பாலக் கீரை உணவு வகைகளை அறிமுகப் படுத்த, கீரை உணவு வகைகளின் மீது விருப்பம் கொள்வார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE