பச்சை வைரம் 12: நோய்களைத் தகர்க்கும் தங்கத் தக்காளி

By டாக்டர் வி.விக்ரம்குமார்

விதையிலிருந்து துளிர்த்து எழும்போதே மருந்தாக முளைத்து நலம் கொடுக்கும் கீரையின் பெயர் மணத்தக்காளி. அதாவது கீரையின் ஒவ்வோர் உறுப்பும் இயற்கை மருந்தாகப் பயன்படுகிறது. கிராமத்து வயல்களில் கறுப்பு மணியாகக் காட்சிக்கொடுத்து, பலரது நாவைச் சுவையூட்டும் மணத்தக்காளி கீரைக்குச் சொந்தமான அழகான பழங்களை யாராலும் மறக்க முடியாது. பஞ்ச காலங்களில் உதவிய உணவுப் பொருள்களைப் பட்டியலிட்டால், மணத்தக்காளி கீரைக்கு முதல் வரிசையில் இடம் கிடைப்பது உறுதி. உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, ஊட்டச்சத்து தேவையையும் பூர்த்தி செய்யும் கீரை ரகம். ‘மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி’ எனும் மூலிகைக் குறளை இங்கு பொருத்திப் பார்க்கலாம். குளிர்ச்சியோடு கூடிய இனிப்புச் சுவையை உடலுக்கு வழங்கும் சுவைமிக்க கீரை மணத்தக்காளி. வியர்வையைப் பெருக்கிக் கழிவுகளை வெளியேற்றும் தனித்துவமான கீரையும்கூட.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE