59 வயதாகும் நான், உயர் ரத்த அழுத்தத்துக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மாத்திரை உட்கொண்டு வருகிறேன். எனது ரத்த அழுத்தத்தை ஒவ்வொரு முறை சோதிக்கும்போதும் அது நார்மல் என்றே வருகிறது. நான் தொடர்ந்து மாத்திரை எடுத்துவர வேண்டுமா? இது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - முனி பாரதி, மதுரை.
உயர் ரத்த அழுத்தத்துக்குத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதம் ஒருமுறை உங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையைத் தொடருங்கள். தேவைப்படும்போது உங்கள் மருத்துவர் மாத்திரையின் அளவைக் குறைப்பார் அல்லது கூட்டுவார். சிலநேரம் மாத்திரையை மாற்றுவார். வயதாக ஆக உயர் ரத்த அழுத்தம் உங்கள் உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து மாத்திரையைப் பரிந்துரைப்பார். பொதுவாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உடலியல் இயக்கநுட்பம் (Physiological mechanism) செயலிழந்துவிடுவதால்தான் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்