பச்சை வைரம் 10: காதலைப் பெருக்கும் பசளை

By டாக்டர் வி.விக்ரம்குமார்

வளைந்து நெளிந்து கொடியேறும் பசளைக் கீரையின் பார்வை மட்டும் போதும், கண்களுக்குக் குளிர்ச்சியை வாரி வழங்க! கொடியில் உறவாடும் இலைகளை உணவாகப் பயன்படுத்த உடல் வெப்பத்தைப் போக்கி, உடல் தேடும் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும்! கொடிப் பசளைக்கு குளிர்ச்சியைப் பரிசளிக்கும் ‘குளுகுளு கீரை’ என்று சில்லெனப் பெயர் சூட்டலாம்.

உலகளாவிய உணவு: பசளைக் கீரையைப் பயன்படுத்தி செய்யப்படும் ‘மூலிகை பகோடா’ குஜராத்தில் பிரபலம். பூசணிக்காயோடு பசளைக் கீரையைச் சேர்த்து சமைக்கப்படும் உணவு, வங்கத்தின் உணவு சிறப்புகளுள் ஒன்று. மங்களூரு உணவில் புகழ்பெற்ற நீர்தோசைக்குத் தொடு உணவாக ‘பசளை-தேங்காய்க் குழம்பு’, வட கர்நாடகத்தின் பல இடங்களில் வாசனை பரப்புகிறது. கிழங்கு வகைகளுடன் பசளைக் கீரையைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் ஆந்திரப் பகுதிகளில் தொடர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE