டாக்டர் பதில்கள் 09: ஜிம் பயிற்சியா, நடைப்பயிற்சியா?

By கு.கணேசன்

எனக்குக் குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது ஏன் ஏற்படுகிறது? இது ஆபத்தானதா? இதற்கு என்ன தீர்வு? ஆலோசனை தாருங்கள், டாக்டர். - எம். முருகேசன், திண்டுக்கல்.

உறங்கும்போது தொண்டையில் மூச்சுக் குழல் தசைகள் தளர்ந்துவிடும். அப்போது சுவாசப்பாதையின் அளவு குறுகிவிடும். இப்படிக் குறுகிய பாதை வழியாகச் சுவாசக் காற்று பயணிக்கும்போது சத்தம் எழுகிறது. இதுதான் குறட்டை. இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்த இயல்புநிலைதான். சில வேளை, மல்லாந்து உறங்கும்போது, தளர்வுநிலையில் உள்ள நாக்கும் சிறிது உள்வாங்கி தொண்டைக்கு வந்துவிடும். இதனாலும் குறட்டை வரும். கீழ்த்தாடை சிறிது உள்வாங்கி இருந்தாலும் குறட்டை வரக்கூடும். உடற்பருமன், தைராய்டு பிரச்சினை, சைனஸ் தொல்லை, சளி, ஜலதோஷத்துடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில் அழற்சி, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை குறட்டைக்குப் பாதை போடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE