பச்சை வைரம் 07: வல்லமை தரும் வல்லாரை!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

ஆற்றங்கரை, ஏரிப்பாசனப் பகுதிகள், வாழைத் தோட்டம், தென்னந்தோப்பு போன்ற நீர் நிலைத்திருக்கும் பகுதிகளில், அழகிய கீரை ஒன்று தனித்துவமாகக் காட்சிதருவதை கிராமத்துக் காட்சிகளை ரசிப்பவர்கள் கவனித்திருக்கலாம்! அந்த அழகிய கீரையின் பெயர் வல்லாரை! வித்தியாசமான வடிவம் கொண்ட இலைகளை மெல்லிய தண்டுகள் தாங்கிப் பிடித்திருக்க, படர்கொடியாக வல்லாரை ஊர்ந்து பரவும்போது, மருத்துவ குணங்களையும் தன்னோடு சேர்த்து சுமந்து செல்கிறது.

சுவைத் தத்துவம்: அறுசுவைகளில் முச்சுவைகளைத் தன்னகத்தே பொதித்து வைத்துள்ள தனித்துவமிக்க கீரை வல்லாரை. கொஞ்சம் கசப்பு, கொஞ்சம் துவர்ப்பு, கொஞ்சம் இனிப்பு என மூன்று சுவைகளின் மருத்துவக் குணங்களையும் ஒருங்கிணைத்து வழங்கும் கீரை இது. செரிமானத் திற்குப் பிறகு முச்சுவைகளில் இனிப்புச் சுவை யின் குணங்களை வல்லாரை உடலுக்குப் பரிசாக வழங்கும் என்கிறது சித்த மருத்துவம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE