“குழந்தை மேதையாக வாழ்வது வரம் என்று நினைக்கிறீர்கள். ஆனால், சராசரியாக வாழ்வதைக் காட்டிலும் மேதையாக வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நீங்கள்தான் சாதித்தீர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டும்” என்று வருத்தப்படும் யோஜீனி டி சில்வாவுக்கு 24 வயதுதான் ஆகிறது. இதற்குள் பல உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தி இருக்கிறார்.
குழந்தை யோஜீனி நடக்கக்கூட ஆரம்பிக்க வில்லை. அவிழ்ந்த காலணி நாடாவை அவர் தந்தை சரிசெய்வதைப் பார்த்தார். தானும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவரின் மற்றொரு காலில் அவிழ்ந்திருந்த நாடாவைக் கட்டிவிட்டார்! அதே வேகத்தில் எழுதக் கற்றுக்கொள்ளும் முன்பே கணினியில் தட்டச்சு செய்யவும் தெரிந்துகொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்