விடை தேடும் அறிவியல் - 49: உயிரினங்களால் ஒளியை உருவாக்க முடியுமா?

By நன்மாறன் திருநாவுக்கரசு

ஒளி எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. உயிரினங்கள் ஒளியைப் பயன்படுத்திதான் உணவு தேடுகின்றன. பெரும்பாலும் அவை சூரிய ஒளியைத்தான் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. மனிதர்கள் மட்டுமே செயற்கை ஒளியை உருவாக்குகின்றனர். பல வகை உயிரினங்கள் தன்னியல்பாகவே ஒளியை உண்டாக்கும் ஆற்றலுடன்தான் உருவாகியுள்ளன.

உயிரினங்கள் இரண்டு வகையில் ஒளியை உண்டாக்குகின்றன. ஒன்று, ஒளிரும் தன்மை (Fluorescence) மூலம் அவை ஒளியை உண்டு பண்ணுகின்றன. இத்தகைய உயிரினங்கள் சூரிய ஒளியை உடலில் உள்வாங்கி, அவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. சில வகை தவளைகள், ஜெல்லி மீன்கள் போன்றவை இந்த வகையில் அடங்கும். இரண்டாவது வகை உயிரினங்கள் ஒளியை உடலிலேயே உற்பத்தி செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை உயிரொளிர்வு (Bioluminescence) உயிரினங்கள் என்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE