விடை தேடும் அறிவியல் 30: தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா?

By நன்மாறன் திருநாவுக்கரசு

பூமியில் 3.90 லட்சம் தாவர வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலேயே இருக்கின்றன. தாவரங்கள் சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு, நீரையும் கார்பன் டை ஆக்சைடையும் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன. இதற்குப் பச்சையம் எனும் நிறமி உதவுகிறது. பச்சையம் சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. மேலும், சூரிய ஆற்றலை வேதியாற்றலாக மாற்றுகிறது. அதனாலேயே இது வினைமையம் என்றும் அறியப்படுகிறது. இந்த நிறமிதான் தாவரங்கள் பச்சை நிறத்தைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கிறது.

சூரிய ஒளி ஏழு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஒளி ஒரு பொருளின் மீது விழும்போது, அந்தப் பொருள் மற்ற வண்ணங்களை உறிஞ்சிக்கொண்டு ஒரே ஓர் ஒளியை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது. அதுவே அந்தப் பொருளின் நிறமாக நமக்குக் காட்சித் தருகிறது. இதேதான் தாவரத்திலும் நடக்கிறது. தாவரங்களில் உள்ள பச்சையம் மற்ற வண்ண சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு பச்சை வண்ணத்தை மட்டும் முழுமையாக உறிஞ்சாமல் பிரதிபலிக்கிறது. அதனால், தாவரங்கள் பச்சையாக நமக்குத் தெரிகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE