கதை: இது யாருடைய கிளி?

By ஏ.ஆர்.முருகேசன்

மணிக்குத் தூக்கமே வரவில்லை. காலையிலிருந்து கிளியைக் காணவில்லை. கிளி இருக்கும் இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டான். ‘ராஜா’ என்று மணியின் குரல் கேட்டவுடன் எங்கிருந்தாலும் பறந்து வந்துவிடும். இன்று காலை வழக்கம்போல் கூண்டிலிருந்து கிளியை வெளியே கொண்டுவந்தான். கொட்டை பருப்புகளையும் மிளகாய்ப் பழத்தையும் கொடுத்தான். ஆசையாகக் கொத்தித் தின்றது கிளி. சிறிது நேரம் சுதந்திரமாக இருக்கட்டும் என்று நினைத்த மணி, அம்மா அழைக்கும் குரல் கேட்டு வீட்டுக்குள் சென்றான். திரும்பி வந்து பார்த்தால் கிளியைக் காணவில்லை.

மணிக்கு அழுகை வந்துவிட்டது. அம்மாவால் அவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை. சத்தம் கேட்டு அப்பா வந்தார். நடந்ததைச் சொன்னான் மணி. “நீ பத்து நாளைக்கு முன்னால அடிபட்டுக் கிடந்த கிளியை எடுத்துட்டு வந்தே... அப்பவே என்ன சொன்னேன்? பறவைகளைக் கூண்டுக்குள் வச்சு வளர்க்கக் கூடாது. உடல்நிலை சரியானதும் பறக்க விட்டுடணும்னு சொன்னேன் இல்லையா? இப்ப அதுவாகவே பறந்து போயிருச்சு. நல்லது. பள்ளிக்குக் கிளம்பு மணி” என்று அப்பா சொன்னார்.
“அது என்னோட கிளிப்பா...”

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE