எந்த நகரில் மாரத்தான் நடந்தாலும் இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வமாகப் பங்கேற்கும் காலம் இது. மாரத்தானின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அந்த நோக்கத்தைச் செயல்படுத்திக் காட்டுபவர்களாக இளைஞர்களே இருக்கிறார்கள். முழு மாரத்தானோ (42 கி.மீ.), அரை மாரத்தானோ (21 கி.மீ.) ஓடும் இளைஞர்களைப் பார்த்து, நாமும் ஓடலாமே என்கிற எண்ணம் உங்களுக்கும் தீப்பொறியாக எழுந்திருக்கலாம். ஆனால், இத்தனை கிலோ மீட்டர் தூரம் எப்படி ஓடுவது என்கிற மலைப்பும் ஏற்பட்டிருக்கலாம்.
உண்மையில் நீண்ட தூர ஓட்டம் என்பது மிகவும் கடினமானது அல்ல. ஓடுவதற்குத் தொடக்கத்தில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அப்படியே கடத்த வேண்டும். இந்த இரண்டையும் திட்டமிட்டுச் செய்துவிட்டால், ஓடுவது சுலபமாகிவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்