பண்டைக்காலப் பண்டமாற்று முறை தற்போது நடைமுறைக்கு வந்தால் எப்படி இருக்கும்? பொருளுக்குப் பொருள், தானியங்களுக்குத் தானியம் என இருந்தது போல உடைக்கு உடை தரும் பண்டமாற்று முறையை நவீன யுகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காயத்ரி ஜெய்குமார். அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலி வழியே பணப் பரிமாற்றம் இல்லாமல், பண்டமாற்று முறையில் உடைகளைக் கொடுத்து வேறு உடைகளைப் பெறலாம்.
மாற்றம் தேவை: வளங்குன்றா வளர்ச்சி (Sustainability development) சார்ந்து தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றவர் காயத்ரி. உலகெங்கிலும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்து வரும் நிலையில் தன்னளவில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்கிற முனைப்பில் ‘ஸ்வாப் சைக்கிள்’ செயலியை இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்