“பதின்ம வயதில் ஏற்படும் எந்தக் கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காதவர் பிரக்ஞானந்தா. இது தொடர்ந்தால் விரைவிலேயே அவர் உலக சாம்பியனாக உருவெடுப்பார்” என்று கடந்த ஆண்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது பெருமையாகத் தெரிவித்திருந்தார் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ். சரியாக ஓராண்டிலேயே செஸ் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தைத் தொட்டுவிடும் தொலைவை நெருங்கிவிட்டார் பிரக்ஞானந்தா.
அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் குகேஷ், விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நிஹல் சரின், எஸ்.எல். நாராயணன், அபிமன்யு, அதிபன் பாஸ்கரன், கார்த்திக் வெங்கட்ராமன், ஹர்ஷா பாரதக்கொடி எனப் பத்து வீரர்கள் பங்கேற்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்