நளி நாட்டியம் 08: சும்மா சிரிக்கத்தான் | அட்வெஞ்சர்களின் அட்ராசிட்டிகள்!

By பிரபு தர்மராஜ்

காட்டை நேசிப்பவர்கள் அதன் வாசலில் நின்றுவிட வேண்டும். இப்போதெல்லாம் காடு, மலை, அருவி, விலங்குகளை அருகிலிருந்து கண்டுகளிக்கும் ஆசையில் காட்டுக்குப் போகும் மனிதர்களின் டிரெண்டிங் உலகெங்கும் பெருகி வருகிறது. டிராவல் கோஸ்ட், டிராவல் அடிக்ட், அட்வெஞ்சரிங் ஏஞ்சல்ஸ் என்று தங்களைத் தாங்களே சொல்லி அலட்டிக்கொண்டு திரியும் ஆசாமிகளுக்குக் ‘காடு, என்றால் என்ன என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் இருப்பதுதான் தமாசும், வேதனையும்.

காட்டுக்குக் கண் கிடையாது என்று சொல்வார்கள். காடு தன்னுள் நுழையும் பீதாம்பரர்கள் முதல் பிரதமப் பிதாமகர்கள் வரை ஒன்றாகத்தான் பாவிக்கும். இயற்கைப் பிரியர்கள், டிராவல் விளாகர் வில்லியம்கள், காடுலாவிக் காடர்கள், அட்வெஞ்சர் ஆல்பர்ட்கள், ரீல்ஸ் ரீகன்மார்கள், கோடை வாசஸ்தலக் கோபாலன்கள், பட்சிகள், விலங்கு ஜீவித நிழற்படக்கார நிக்சன்கள், காடோடு இயைந்து பானத்தைப் பருகும் போதை பார்ட்டிகள் என்று காட்டுக்குள் திடீர் திடீரென எழுந்தருளும் ஆசாமிகளைப் பிரிக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE