அரசாங்க அலுவல்களில் இருக்கும் ஆசாமிகள் சில நேரம் செய்துவிடும் சிறிய எழுத்துப் பிழைகள்கூட நம்மை உன்னதங்களின் வாசல்படியில் கொண்டு நிற்க வைத்துவிடும். பெயர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான அடையாளம். நீங்கள் ஒரு வண்டியை வாங்குவீர்களானால் அது உங்கள் பெயர்களில் பதியப் படுமேயொழிய உங்களுக்கானதல்ல என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?
பிறக்கும்போது பெயரின்றிப் பிறக்கும் மனிதனுக்கு பிறகொரு நாளில் ஏதேதோ அர்த்தங்களோ, அர்த்தமின்றியோ, பித்ருக்களின் அடையாளங்களோடு சிலபல எழுத்துகளைக் கலந்து சூட்டப்படும் நாமகர்ணங்கள்தான் அவனது மரிப்பு வரைக்கும் பின்தொடரும் தனிப்பட்ட அடையாளம். அவர்கள் செத்த பிற்பாடு அவர்களுக்கென்று ஒரு தனிப் பொதுப்பெயர் ஒன்று உண்டு. அது பிணம், சவம் அல்லது பாடி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்