நளி நாட்டியம் 06: சும்மா சிரிக்கத்தான் | குடும்பக் Fam

By பிரபு தர்மராஜ்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் வாக்கியத்துக்குள் ஒரு பெரும்பொருள் இருப்பதைப் பரம்பொருளாகவே கருதலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் இருப்பதைப் போலவே குடும்பத்துக்குள்ளும் பல குணாதிசயங்களுடன் கூடிய பிரகஸ்பதிகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. சிறு வயதிலிருந்தே அவர்களை நெருக்கமாகக் கவனித்து வந்தால், நம்முடைய சொந்த ரத்தத்திலேயே பால்டாயில், கில்பக், டிம்மட் போன்ற நற்காரியங்கள் கலந்திருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். நம்முடைய கேடுகாலத்தில் அதுவும் அவர்களுடைய சொந்த நிலத்தில் ஏகபோகமாக விளைவிப்பார்கள்.

முடிந்தது கதை: அவர்கள் முதலில்கண்வைப்பது நம்முடைய பொருளா தாரத்தில்தான். சொந்தக்காரர்களின் கண்களுக்குத் தப்பி ஒரு குண்டூசியைக்கூட உங்களால் வாங்கிவிட முடியாது. “பைக் வாங்கிருக்கானே? ஏது இவ்வளவு காசு? கள்ளநோட்டு அடிக்கானோ என்னவோ?” என்பதில் தொடங்கி நம்முடைய சொந்த வீடு வரைக்கும் அவர்களுடைய கண்ணைத் உறுத்திகொண்டே இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய வாழ்க்கை டைரியில் ஒரு மார்ஜின் கோடுகளைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE