உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 44 நாடுகளுக்கு பட்ஜெட் பயணம் மேற்கொண்டிருக்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார் என்கிற இளைஞர். இவருடைய பயணக் காணொளிகள் அடங்கிய ‘பேக்பாக்கர் குமார்’ எனும் யூடியூப் பக்கத்தைத் தொடர்வோர் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அண்டார்க்டிகாவில் பனியால் மூடப்பட்டப் பகுதிகளிலிருந்து இவர் பதிவிட்ட காணொளிகள் எல்லாம் யூடியூபில் சூப்பர் ஹிட்.
சென்னை ஐஐடியில் பொறியியலில் படிப்பை முடித்தவர் செந்தில்குமார். படிக்கும்போதே நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்து சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறார். அதுவரை வெளிநாட்டுப் பயணம் என்றால் அதிக செலவாகும் என்று இருந்தவருக்கு ‘பேக்பாக்கிங்’ (Backpacking) எனும் பயண முறை அறிமுகமாகியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்