இயக்குநரின் குரல்: அரசியலுக்குள் அடங்காத அருள்நிதி!

By ஆர்.சி.ஜெயந்தன்

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த தவறான பரப்புரைகளின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைக் கதைக் களமாகக் கொண்டு ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ராட்சசி’ படத்தை இயக்கியிருந்தார். சை.கௌதம் ராஜ். தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அருள்நிதி ‘டைட்டில்’ கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

படத்தின் தலைப்பு, ‘மலையூர் மப்பட்டியான்’, ‘கரிமேடு கருவாயன்’ பாணியில் இருக்கிறது. இக்கதையின் நாயகன் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரமா? - நாயகன் தற்காலத்தில் வாழும் ஒரு கதாபாத்திரம்தான். இது ‘பீரியட்’ படம் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கே வாழும் ஒரு சாமானிய விவசாயியின் மகன்தான் ஹீரோ. ஒரு காலத்தில் அக்கிராமத்தின் பெயர் ‘கழுவேற்றுவான்குளம்’ என்றிருந்தது. கழுமரம் என்பது அரசியல் ரீதியாக மரணத் தண்டனை பெற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE