திரைச்சொல்லி - 10: கருணையற்ற தாக்குதல்

By விஸ்வாமித்திரன் சிவகுமார்

‘கொட்டுக்காளி’ படத்தை முன்வைத்து இயக்குநர் அமீர் தனது கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பது முரண்பாடுகளின் கூட்டுக் கலவை. உலகளாவிய விருதுகளைப் பெறும் கலைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடத் தேவையில்லை என்பது அவரது வாதம். பின்னிணைப்பாக, ‘வெகுஜன சினிமாவுக்குப் பழகிப்போயிருக்கும் பார்வையாளர்களுக்குப் பணமும் நட்டம், பொழுதும் நட்டம்’ என்கிறார். ‘அத்தகைய படத்தைக் காண விரும்புபவர்கள் ஓடிடியில் பார்த்துக்கொள்ளட்டுமே’ என்று ஆலோசனையும் தருகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் எங்குமே திரைப்பட விழாக்களில் பங்குபெறும் ஒற்றை நோக்கத்துடன் படங்கள் எடுக்கப்படுவதில்லை. மக்கள் பார்க்கவேண்டும் என்பதே அனைத்துப் படைப்புகளினதும் இறுதி இலக்கு. மேலை நாடுகளைப் பொறுத்தவரை, கலைப்படங்கள் விருதுகளைப் பெறுகிறதோ இல்லையோ குறிப்பிட்ட காலத்துக்குள் திரையரங்குகளுக்கு வந்துவிடுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE