மகேந்திரனின் திரையுலகில் அவருடைய கதாபாத்தி ரங்களின் தன்மை மற்றும் வடிவமைப்பைப் போன்று நீங்கள் வேறெங்கும் காண்பது அரிது. பொதுவாக, எதிர்மறை கதாபாத்திரம் ஓர் ஆண் எனில், அவன் ஆயுதங்களுடன் தோற்றம் அளிப்பவனாக, பொதுச் சமூகத்துக்குப் பெரும் இன்னல்கள் விளைவிக்கக் கூடியவனாக, பொய், புரட்டு, தீங்குகள் செய்பவனாக எப்போதும் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவான். இவை ஒரு மனிதனுடைய தீமையின் வெளித்தோற்றம்.
உண்மையில், எதிர்மறைக் கதாபாத்தி ரத்தின் அகத்தில் தோன்றுகிற உணர்ச்சி என்பது இதைவிடவும் மேலோங்கியது. அதற்கு ஒரு தொடர்ச்சியிருக்கிறது. மகேந்திரன் படைக்கும் எதிர்மறை கதாபாத்திரத்தின் உணர்ச்சி என்பது, காலங்காலமாக மனித மனங்களில் மண்டிக் கிடக்கிற அகங்காரம் மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப் பாடு என்பதை ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’ படங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்