பிறந்தபோதே உலகில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே பிரதியெடுத்துக் கொடுக்கும் ‘ஆவணப்பட’மாகத்தான் பிறந்தது சினிமா. ஆனால், இன்று ஆவணப்படத்துக்கும் சிறந்த கதை சொல்லல் முறைகள் வந்துவிட்டன.
அப்படியிருக்கும்போது, மனித வாழ்வைப் படியெடுக்கும் திரைப்படங்கள், இன்று கதை சொல்லும் உத்தியிலும் காட்சிமொழியைக் கையாளும் திறமையிலும் சிறந்து விளங்குகின்றன. ஒரு சிறந்த திரைப்படம் தரும் திரை அனுபவம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருகிறது. பல சிறந்த நாவல்களை நாம் ‘கிளாசிக்’ என்று மனதுக்கு நெருக்கமாக அழைப்பது போலவே, நல்ல படங்கள் காலப்போக்கில் கிளாசிக்குகளாக மாறிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் ‘அந்தப் படத்தைப் பார்த்தீர்களா? இன்னும் பார்க்கவில்லையா? தவறவிடாதீர்கள்’ என்று பரிந்துரைக்கிறோம். இந்நூலில் டாக்டர் ஆர். கார்த்திகேயன் அதைத்தான் ரசனையோடு செய்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்