நினைவரங்கம்: மழை மட்டுமா அழகு...

By கார்த்திகா ராஜேந்திரன்

தனது பாடல் வரிகளால் எந்நாளும் ஏதாவதொரு சிந்தனையில் நம்மை ஆழ்த்துபவர் கவிஞர் நா.முத்துக்குமார். அவரது பிறந்தநாளான கடந்த ஜூலை 12 அன்று, சமூக வலைதளங்கள் முழுக்க முத்துக்குமாரின் பாடல் வரிகள் நிரம்பியிருந்தன. மறைந்த பிறகும் தனது எழுத்துக்களில் வாழும் முத்துக்குமாரின் நினைவாக ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ என்கிற இசை நிகழ்ச்சி ஜூலை 28 அன்று சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

‘மழை மட்டுமா அழகு, சுடும் வெயில்கூட ஒரு அழகு’ என்கிற பாடல் வரிகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருதை வாங்கிக்கொடுத்த ‘சைவம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே’ பாடலில் இடம்பெறும் அழகான வரி இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE