“நான் அடிச்சா... நீ செத்துருவ!" அடிமேல் அடி வாங்கிக்கொண்டு, திருப்பியடிக்காமல் ரத்தம் வழிய நிமிர்ந்து பார்க்கும் இளம் ‘நாயகன்’ வேலு நாயக்கர் மொழி புரியாத இன்ஸ்பெக்டர் கேல்கரை எச்சரிக்கிறார். இதுவே ‘நாயக’னில் (1987) கமல்ஹாசன் பேசும் முதல் வசனம். வேலு எப்படிப்பட்டவர் என்பதைச் சட்டெனப் புரிய வைத்துவிடும் சின்ன வசனம். எழுதியவர், பாலகுமாரன். தமிழ் சினிமா பேசத் தொடங்கியதிலிருந்து வசனம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் பயணித்திருக்கிறது.
அந்த வரிசையில் மக்களின் புழங்கு மொழியில் எழுதி, கதாபாத்திரங்களின் வார்ப்புக்குக் கட்டுமானமாக மாறிய வசன கர்த்தாக்களில் குறிப்பிடத்தகுந்தவர் பாலகுமாரன். ‘எழுத்துச் சித்தர்’ என்று வெகுஜன வாசகர்களால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்