திரைப் பார்வை: மாமன்னன்கள் காலத்தின் தேவை

By பிருந்தா சீனிவாசன்

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘மாமன்னன்’ படம், பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களிடம் இருக்கிற சாதி வெறி குறித்துத் தனது முதல் படத்தில் பேசியவர், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மண்டிக் கிடக்கும் சாதிய மனோபாவம் குறித்து அடுத்த படத்தில் பதிவுசெய்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், அதிகாரத்துக்கு வருவது குறித்து ‘மாமன்னன்’ வாயிலாகப் பேச முயன்றுள்ளார்.

சாதியப் படிநிலை, அதைக் கட்டிக்காக்கும் சமூகக் கட்டமைப்பு – இவைதான் இவரது படங்களின் மையச் சரடு. சாதி ஆணவத்துடன் செயல்படுகிற மனிதர்களிடம் மன மாற்றம் ஏற்படாதவரை இங்கே எதுவுமே மாறப்போவதில்லை எனத் தன் முதல் படத்தில் சொன்னதைத்தான் ‘மாமன்ன’னிலும் அழுத்தமாக நிறுவியிருக்கிறார் மாரி செல்வராஜ். தான் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னால் நின்றபடியே பேசுகிற சட்ட மன்ற உறுப்பினர் மாமன்னன், அவைத் தலைவராக உயர்வதற்கான சாத்தியங்களையும் இப்படத்தில் கவனப்படுத்தியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE