மக்கள் தமிழ் வாழ்க!

By செய்திப்பிரிவு

‘ஒவ்வொரு எழுத்தாளரும், அவரவர் வட்டார நடையில் எழுதத் தொடங்கிவிட்டால், வாசிக்கிறவர்கள் பாடு பெரும்பாடாகி விடுமல்லவா?’ என்கிற கேள்வி, வாதத்துக்குச் சரி என்று தோன்றினாலும், இதில் உண்மையில்லை. தமிழ்த் தாய்க்கு எத்தனையோ முகங்கள்.
நாம் நினைப்பதுபோல் அவளுக்கு ஒரே முகம் இல்லை. ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாரதி சொன்னது தேசத்துக்கு. தமிழ்நாட்டுத் தமிழ்த் தாய்க்குச் செட்டிநாட்டிலொரு முகம்; கொங்கு நாட்டிலொரு முகம்; சோழ நாட்டில் ஒன்று, நெல்லைச் சீமையில் ஒன்று, கரிசல் காட்டில், தொண்டை நாட்டில், நாஞ்சில் நாட்டில், மதுரை மண்ணில், இன்னும் பல (ஈழத்துத் தமிழையும் சேர்த்துக்கொள்ளலாம்). இப்படி வட்டாரந்தோறும் பல திருத்தமான முகங்கள் இருக்கின்றன. முகத்துக்கு ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்கு ஒரு பேச்சு இருக்கிறது. தமிழ் மொழி அவ்வளவு பரந்த விஸ்தாரமான மொழி. நீங்கள் நினைப்பதுபோல், இப்போது தமிழ் அறிஞர்கள் மேடையிலே பேசுகிற, எழுதுகிற ‘ஓட்டல் சாம்பார் மொழி’ அல்ல, நமது தமிழ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE