இலக்கியத்தில் வாழும் வட்டார வழக்குகள்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மொழிக்கும் அது பேசப்படும் வட்டாரத்தைப் பொறுத்துத் தனித்த இயல்புண்டு. மக்கள் பயன்பாட்டு மொழிதான் இந்த வட்டார வழக்கு. நெல்லை, மதுரை, நடுநாடு, செட்டிநாடு, கொங்கு, நாஞ்சில், தஞ்சை, சென்னை, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, இலங்கை மலையகம் எனத் தமிழுக்கு அழகு சேர்க்கும் பல வட்டார வழக்குமொழிகள் பயன்பாட்டில் உள்ளன.

படையெடுப்பும் பண்பாட்டுக் கலப்பும் வட்டார வழக்கு என்ற புழங்கு மொழி உருவாவதற்கான காரணம் எனலாம். ஒவ்வொரு வட்டார வழக்குச் சொற்கள் உருவாவதற்கு, ஒரு சுவாரசியமான பின்னணி இருக்கும். மிளகாய், இலங்கைக்கு கொச்சி துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டது. கொச்சி யிலிருந்து கொண்டுவரப்பட்ட காய் என்பதால் அது இன்றும் யாழ்ப்பாண வட்டார வழக்கில் கொச்சிக்காய் என்றே அழைக்கப்படுகிறது. சென்னை வட்டார வழக்கில் ‘கானா பாட்டு’ என்றால் இங்குள்ள நாட்டார் பாடல். இந்தியில் கானா என்றாலே பாட்டுதான். வட இந்தியர்கள் வருகையின் தாக்கத்தால் இந்தச் சொல் இங்கு வந்திருக்கும். நெல்லைச் சீமை, ஜோலி என்ற சொல் வழக்குச் சொல்லாகப் பயன் பாட்டில் உள்ளது. ‘எங்கே தூரமா?’ எனக் கிளம்பிச் செல்பவரைக் கேட்டால், ‘ஆமா, ஒரு சோலியாப் போறேன்’ எனப் பதிலளிப்பார். வேலை என்பதற்கான மலையாளச் சொல்தான் ஜோலி.
பரவலாக்கப்படாத நகர வளர்ச்சியால் இன்று வட்டார வழக்குகள் சிதைந்துவருகின்றன. பெரும்பாலானவர்கள் கல்வி, வேலை என வாய்ப்புகளுக்காகப் பெருநகரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே புதிய தலைமுறை உருவாகிறது. இந்தப் புதியவர்களுக்கு வட்டார வழக்குகள் கையளிக்கப்படுவதில்லை. இந்தச் சூழலில், வட்டார வழக்குகளை இலக்கியங்கள்தான் வேராகப் பிடித்துக்கொண்டுள்ளன. வட்டார வழக்குக் கதைகளைப் படிக்கும்போது அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தங்கள் வட்டார வழக்கைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் நிச்சயம் நினைவேக்கம் உண்டாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE