நதியின் பிழையன்று

By அ.கா.பெருமாள்

கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தக் கறுத்தச் சிறுவன் உமிழ்நீரைப் பழையாற்றிலே வேகமாய் உமிழ்ந்ததைப் பார்த்த பார்வதி “மோனே ஆறு அம்மாவாக்கும், அம்மா மேல நீ துப்புவியா?” என்று கேட்டுவிட்டு, அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள். பார்வதிக்கு வயது நூறை எட்டிவிட்டது என்று சொன்னார்கள்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வுக்குக் கதைப்பாடல்களைத் தேடி அலைந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தோட்டமலைக்குப் போயிருந்தேன். காட்டையும் விலங்குகளையும் அழிக்கக் கூடாது. ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பின்னணியில் மலைவாழ் மக்களான காணிக்காரர்கள் நடத்திய கூத்தைப் பார்க்கப்போயிருந்த நேரத்தில்தான் அந்த மூதாட்டியைச் சந்தித்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE