தமிழ்நாடு: கவனம் பெறும் 10 | வரலாறு சொல்லும் நதிகள்

By செய்திப்பிரிவு

தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்ததில் அகழாய்வுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2015-16இல் நடத்தப்பட்ட அகழாய்வில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுத் தொடக்கக் காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகள் தொடங்கி சுடுமண் உறைகிணறு வரை அந்த அகழாய்வில் கண்டறியப்பட்டன.

இந்தியத் தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2017 முதல் நடத்தப்பட்டுவரும் தொடர் அகழாய்வுகள், ‘கீழடி’ என்கிற சொல்லுக்கு உலகளாவிய அறிமுகத்தை ஏற்படுத்தித்தந்தன. கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருளின் காலத்தைக் கணித்தபோது அது பொ.ஆ.மு (கி.மு.) 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கீழடி, கொந்தகை, மணலூர் அகழாய்வுகள், சங்க காலத்திலேயே வைகை நதிக்கரையோரத்தில் நகர நாகரிகம் செழித்தோங்கியிருந்ததை உறுதிப்படுத்தின. கீழடியைப் போலவே தாமிரபரணிக் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் தமிழ் வரலாற்றுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE