அறிவொளி: நூல்கள் எனும் ஆவணம்

By கமலாலயன்

அறிவொளி இயக்கம் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் 1989ஆம் ஆண்டு முதல் 2012 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. எளிய வாசித்தல், எழுதுதல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் சிறு நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், சுவரொட்டிகள் வடிவில் தயாரிக்கப்பட்ட செய்தித்தாள்கள், அவற்றில் வாராந்திர இணைப்பிதழ்கள், மின் அட்டைகள் போன்ற பல்வேறு கற்பித்தல் சாதனங்கள் வழங்கப்பட்டன.

சிறு-குறு நூல்கள், 16 முதல் 32 பக்கங்கள் அளவில் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றில், ஒரு பக்கம் செய்திகளும் எதிர்ப்பக்கத்தில் படங்களுமாக அச்சிடப்பட்டிருந்தன. கற்போர் எளிதாகப் படிப்பதற்கேற்ற முறையில் பெரிய தடித்த வடிவ எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் உள்ளடக்கப் பொருண்மைகள் வெவ்வேறானவை. பெரும்பாலும் கதைகளின் வடிவில் இருக்கும். இந்தக் கதைகளிலும் 75 % கதைகள் சுவையான, படிப்பதற்கு ஆர்வமூட்டும் வடிவில் அமைந்திருந்தன. இவை முதலில் களத்தில் கற்போர் நடுவே வாசிக்கப்பட்டு, அவர்களின் எதிர்வினைகளுக்கேற்பத் திருத்தியமைக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட பின், அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE