இத்தனை வருசமா எங்க போயிருந்தீங்க?

By ச.தமிழ்ச்செல்வன்

ஆலங்குளம் ஒன்றியத்தில் மாறாந்தையைத் தாண்டி குறிப்பன்குளம் என்கிற கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். நான், ஒரு பெண் தொண்டர் இருவர் மட்டும். அந்தப் பெண் அந்தப் பகுதியில் பல காலமாகச் சமூக சேவை செய்துவருபவர். அவரிடம் ஒரு டி.வி.எஸ்.-50 இருந்தது. “ஏறுங்க சார் பின்னாடி”, என்று அவர் வண்டியை ஸ்டார்ட் செய்ததும், ஒருவித மனச் சங்கடத்துடன் “வண்டியை நான் ஓட்டறேன்'' என்று இழுத்து “சரி” என்று அவர் பின்னாடி உட்கார, நான் வண்டியை ஓட்டினேன்.

தார்ச்சாலை - மண்சாலை எல்லாம் முடிந்து ஒத்தையடிப் பாதையில் வண்டி இறங்கியது. நிலா வெளிச்சமும் இறங்கி வந்தது. அந்தப் பாதையில் தொடர்ந்து வண்டியை ஓட்ட என்னால் முடியவில்லை. “அதான் முதல்லயே சொன்னேன்”, என்ற சிரிப்புடன் அவர் வண்டியை வாங்கினார். என்ன லாகவமான டிரைவிங். என்னைவிட வயசில் ரொம்ப சிறியவரான அப்பெண்ணின் முன் ஒரு சிறு பையனாக உணர்ந்தபடி சென்றது பயணம்.
பாதை என்ற ஒன்றே இல்லாத அந்த ஊருக்குள் (1991லும் இப்படி ஒரு ஊரா? எனப் பேசியபடி) நுழைந்தோம். அந்த ஊரைத் திரட்டி, எரிந்துகொண்டிருந்த ஒரே ஒரு தெரு விளக்கின் கீழ் அரை மணி நேரத்தில் உட்காரவைத்தார் நம் பெண்மணி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE