எனது பால்யகாலத்தில் என்னுடைய தாயார் ஆடிப் பெருக்கன்று நதிக்கரையில் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் பூஜை செய்த மஞ்சள் நீரை வீட்டுப் புறக்கடையிலிருக்கும் செடிகொடி களுக்கும் மரங்களுக்கும் ஊற்றுவார். வாசலில் அழகான கோலமிட்டு, பிறகு, மஞ்சள் சரடைச் சுற்றி கஞ்சி, தேங்காய்ப்பால், வடை ஆகியவற்றை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.
திருமணமான பெண்கள் ஆடிப்பெருக் கன்று தாலிபிரித்துக் கோக்கும் முக்கியச் சடங்கின் அற்புதத்தை எனது புனைவுகளில் எழுதியிருக் கிறேன். காவிரி நதி சார்ந்து இலக்கியம் படைத்த என் முன்னோடிகள் தி.ஜானகிராமனையும் கு.ப.ராஜகோபாலனையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்