பொங்கலுக்குத் தயாராகச் சொல்லும் ஆடி

By பிருந்தா சீனிவாசன்

ஆறுகள் செழித்திருக்கும் ஊர்களில் பதினெட் டாம் பெருக்கு கொண் டாட்டமாக அமையும் போது பாலாறும் அதன் கிளை ஆறுகளும் ஆடி பிறந்துவிட்ட பிறகும்கூடக் கரைதொட்டுச் சுழித்தோடுவது அரிது. வருடத்தின் பெரும்பாலான நாள்கள் வறட்சியை மட்டுமே காணும் வட தமிழகத்தின் பல ஊர்களில் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டுக்காக ஒதுக்கப்படும். சிலர் கன்னிகளுக்கும் சிலர் காட்டேரி, முனீஸ்வரன் உள்ளிட்ட சிறு தெய்வங்களுக்கும் பொங்கல் வைப்பார்கள். பெரும்பாலும் தங்கள் கழனிகளில்தாம் பொங்கல் வைப்பார்கள். கோயில்கள் பெருகிவிட்ட இந்நாளில் கோயில்களிலும் பொங்கல் வைப்பதுண்டு.

பிற ஊர்களைப் போலவே வட பகுதியிலும் ஆடி வெள்ளி சிறப்புக்குரியது. வெள்ளிதோறும் அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். மூன்றாம் வெள்ளி ஜாத்திரையோடு கொண்டாட்டம் நிறைவுக்கு வரும். அம்மனை அலங்கரித்து ஊருக்குள் அழைத்துவருவார்கள். சாமி ஊர் சுற்றி முடித்துக் கோயிலில் நிலைகொண்டதும், ஊர் பொதுவெளியில் ஆட்டம் நடைபெறும். ரேணுகாதேவி சரித்திரம் உள்ளிட்ட அம்மன் கதைகளையே தெருக்கூத்தாக நடிப்பார்கள். ஆடி வெள்ளியில் அலகு குத்திக்கொண்டும், வேப்பஞ்சேலை அணிந்துகொண்டும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவோர் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE