திரு.வி.கல்யாணசுந்தரனாரின் ‘இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்’, வள்ளலாரைப் பற்றிய அறிமுக நூல்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறுவது. 1929இல் வடலூரில் தைப்பூச தினத்தன்று திரு.வி.க. ஆற்றிய சொற்பொழிவு, பின்பு ‘நவசக்தி’ ஏட்டில் கட்டுரைத் தொடராக வெளிவந்து அப்போதே நூல்வடிவையும் பெற்றது.
‘தயையுடையார் எல்லாரும்… அருளுடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே’ என்று பேசும் வள்ளலாரின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியிருக்கும் திரு.வி.க., அருள்நெறி என்றே அதைக் குறித்துள்ளார். அவரது பாடல்களை அருள்மொழி என்றும் போற்றியுள்ளார். அருள்மொழியே என்றாலும் அதைப் புரிந்துகொள்வது எல்லார்க்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. திரு.வி.க. போன்ற சமய ஞானம் கொண்டவர்களின் வழிகாட்டலோடு வள்ளலாரைப் புரிந்து கொள்வது இன்னும் கொஞ்சம் எளிதாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்