கடைச் சங்க காலத்துக்குப் பிறகு தோன்றிய தொன்மங்கள் முருகப் பெருமான் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கியிருந்தாலும், தற்காலத்தில் முருக வழிபாடு தமிழ் மக்களின் வழிபாடாகவே பெருமளவில் காணப்படுகிறது. உலகளாவிய நிலையில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது.
முருகன் என்னும் கடவுள் சார்ந்த நம்பிக்கை ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுள் கௌமாரம் என்பது முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றிப் பின்பற்றுவதாகும். சைவம் என்பதுதனி மதமாகப் போற்றப்பட்டாலும், கௌமாரம் (முருக வழிபாடு), காணாபத்தியம் (கணபதி வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகியன தனித்த வழிபாட்டு முறைகளாகவே இருந்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்