குடந்தையை சுற்றியுள்ள ராசி கோயில்கள்

By பனசை பாக்யலெஷ்மி

உலகத்தில் இருக்கும் அனைத்து தலங்களுக்கும் தோற்றுவாயாக குடந்தை விளங்குகிறது. இத்தலம் முப்பெரும் தேவர்களான பரமசிவன், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் தலம் ஆகும். ஊழி காலத்தின் இறுதியில் ஜீவ வித்துக்கள் அனைத்தும் ஒரு குடத்தில் தங்கின. அந்த குடம் தங்கிய இடமே கும்பகோணம். எனவே இது அனைத்து தலங்களுக்கும் ஆதாரமான இடமாக விளங்குகிறது.

எல்லா தலங்களையும் நகரங்களையும் மலரவன் எனப்படும் நான்முகன் படைத்தார்என்றும், கும்பகோணத்தை சர்வேஸ்வரரான சிவபெருமானே உருவாக்கினார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் கைலாயத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இன்னும் பல தலங்களில் எழுந்தருளிஇருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இருதயம் லயிக்கும் இடம் என்று ஒன்றைத்தான் சொல்ல முடியும். அவர் கருணை சிறக்கும் இடம் என்று ஓர் ஊரைத்தான் காட்ட முடியும். அந்த இடம்தான் கும்பகோணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE