கல்லும் கதை சொல்லும் | கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயில்

By வெ.கணேசன்

தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் விளங்குகிறது. மதுரை நாயக்கர் ஆட்சி பாண்டிய நாட்டில் சிற்பக்கலை வளர்ச்சியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதற்கு மேற்கே பாபநாசம் தொடங்கி கிழக்கே சேர்ந்த பூமங்கலம் வரை உள்ள நதிக்கரை நாகரிகம் வளர்ந்த தலங்களில் அமைந்த பெருங்கோயில்களே சாட்சி.

மதுரை நாயக்கர் ஆட்சியில் முதல் மன்னரான விஸ்வநாத நாயக்கரின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் (பொ.ஆ.1563-72) என்பவர் புதிதாக ஓர் ஊரை உருவாக்கி கிருஷ்ணாபுரம் என்று பெயரிட்டார். முன்னதாக இப்பகுதி திருவேங்கடராயபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஐதீகப்படி ஊருக்கு மேற்கே மூன்று பெரிய சுற்றுக்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலை எழுப்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE