திருநெல்வேலி மாவட்டம் மேல ஓமநல்லூர் ஸ்ரீ பிரணவேஸ்வரர் கோயில் திருமணத் தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல ஈசன் கங்கையை மணந்த கங்காதரனாக அழைக்கப்படுகிறார். திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணி நதியைப் போலவே அதன் துணை நதிகளான சிற்றாறு, கடனா நதி, பச்சையாறும் பெருமையுடன் திகழ்கின்றன. கங்கை நதியே இங்கு சியாமளா (பச்சையாறு) என்னும் பெயரில் ஓடிக் கொண்டிருப்பதாக ஐதிகம்.
திருநெல்வேலி தலபுராணத்தில் மந்திரேசுவர சருக்கம் என்ற பகுதியில் பச்சையாறு பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு இப்பகுதியில் இருந்த கந்தர்ப்ப நகரத்தில் வாழ்ந்த பெரும் தவசியான ரேணு முனிவர் புனித கங்கை நதியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் இருந்தார். அதேசமயம் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு, கங்காதேவி கயிலைநாதனைப் பிரார்த்தித்தாள். இதைக் கேட்ட உமா மகேஸ்வரி, கங்கையை பூலோகத்தில் மானிடராகப் பிறக்குமாறு சபித்துவிடுகிறாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்