சத்தீஸ்கர் விஷ்ணு கோயிலில் சிவராத்திரி தினத்தில் கும்பமேளா

By ராஜி ராதா

சத்தீஸ்கர் மாநிலத்தில் காரியா பாண்ட் ஜில்லாவில் ராஜிம் என்ற ஊரில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு கோயில் உள்ளது. ராஜீவலோசனன் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் பெருமாள், மகா சிவராத்திரி தினத்தில் கும்பமேளா வைபவத்தில் திரிவேணி சங்கமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ராஜிம் ஒரு திரிவேணி சங்கமம் பகுதி. இங்கு மகாநதி, பைரி, சொந்தூர் என்று மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. மகா சிவராத்திரி தினத்தில் முதல் சங்கமம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் மூன்று நதிகளிலும் நீராடி, விஷ்ணுவை தரிசிப்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது. அன்று கும்பமேளா கொண்டாடப்பட்டு பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE