திருக்கடல் மல்லை தீர்த்தவாரி

By செய்திப்பிரிவு

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட 108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக போற்றப்படும் திருக்கடல் மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயில் 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசனால் கட்டி முடிக்கப்பட்டது. துன்பங்கள் போக்கும் திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.

பற்றுடை அடியவர்க்கு எளியவன் பரந்தாமன். பக்தியுடன் தன்னலமின்றி தொண்டு செய்யும் அடியவர்க்கு எளிதில் அடையும்படி இருப்பவராக பரமாத்மா இருக்கிறார். புண்டரீக மகரிஷி என்னும் மாமுனிக்கு தான் பள்ளி கொண்டிருந்த பாற்கடலை விட்டு இறங்கி வந்து அருள் தந்த அற்புதன் திருமால். ஆதிசேஷன் மீது கிடந்து இருந்தவன் தன் அடியவர்க்கு அருள கடற்கரையில் தரையில் படுத்து அருளிய அற்புதமே ‘மல்லாபுரி மஹாத்மியம்’. மல்லாபுரி என்றும், திருக்கடல் மல்லை என்றும், மகாபலிபுரம் என்றும் அழைக்கப் படும் திருத்தலம் தற்போதைய மாமல்லபுரம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE