ஜனவரி 25 | பித்துக்குளி முருகதாஸ் 104 ஆவது பிறந்த நாள்: நாடறிந்த பித்துக்குளி!

By வா.ரவிக்குமார்

கோயம்புத்தூரில் 1920இல் சுந்தரம் அய்யர் அலமேலு தம்பதிக்கு ஜனவரி 25 தைப்பூசம் அன்று பிறந்தவர் பாலசுப்ரமணியன். ஓடிவிளையாடும் பாலகப் பருவத்திலேயே இறை சிந்தனையை மனதிற்குள் நிறைவாகக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

பிரம்மானந்த பரதேசி அந்தக் குழந்தையை ஆட்கொண்டார். "நீயும் என்னைப் போல பித்துக்குளியாகப் போகிறாய்" என்பதே குருவின் ஆசியாக அந்தக் குழந்தைக்குக் கிடைத்தது. முருகனின் மீது பித்தாகி, அவரின் புகழைப் பாடிய அந்தக் குழந்தையே, வளர்ந்ததும் `பித்துக்குளி முருகதாஸ்' என்னும் பெயரில் முருகதாசனாக அறியப்பட்டவர். 90 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த பித்துக்குளி முருகதாஸ், தன் வாழ்நாளில் 38 ஆண்டுகள் மருதமலை திருப்படிக்கட்டு திருவிழாவில் பங்கெடுத்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE