நல்லொழுக்க புரட்சியாளர் 12: புன்னகை புரிந்திடுங்கள்!

By ஜே.எஸ். அனார்கலி

அன்பும் அறனும்தான் இல்லறத்தின் பண்பும் பயனும் என்றார் வள்ளுவர். இஸ்லாமும் அதையே வலியுறுத்துகின்றது. குடும்ப வாழ்வுக்கு இன்சொல்லும் இன்முகமும் இன்றியமையாதவை. எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் ஜகாத் (தர்மம்) கொடுப்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளுள் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. வசதிபடைத்தவர் தம்மனதைத் தூய்மையாக்கிக் கொள்ளும் வழியும் அதுவே.

எளியவர்களைப் பொறுத்தமட்டில் புன்னகை புரிவதே தர்மம்தான் என்கிறார் அண்ணல். பணமோ, பொருளோ கொடுப்பதற்கு இல்லாவிட்டாலும் இன்முகத்துடன் ஒருவரை எதிர்கொள்வதும் தர்மத்தில் அடங்கும். புன்னகையுடன் ஒருவரைப் பார்ப்பதென்பது நேர்மறையான எண்ணத்தை உருவாக்கக்கூடியது. அவ்விருவருக்கும் இடையிலான உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE